தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் TNPSC, SSC, IBPS மற்றும் RRB ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் 200 நபர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இணையவழி விண்ணப்பங்கள் பெற்று பயிற்சி வகுப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது . மாலை 5.30 மணிமுதல் 8.30 மணிவரை ஆறு மாதங்களுக்கு இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
இதற்கு தகுதிகளாக குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் 01.01.2023 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி பெற விரும்புவோர் https://tnau.ac.in/cecc/ என்ற தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணையதள மூலம் 31.03.2023 வரை விண்ணப்பிக்கலாம். மேலும், பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை முழுமையாக சரிபார்த்த பின்னர் விண்ணப்பம் வேண்டும் என்றும் இணைய வழி மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின் திருத்தம் கோரி பெறப்படும் எந்த ஒரு கோரிக்கையும் எற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயிற்சி வகுப்புக்கான அழைப்புக் கடிதம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக https://tnau.ac.in/cecc/ பதிவேற்றம் செய்யப்படும். இதனை சேர்க்கையின் போது அவசியம் எடுத்துவர வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கான சேர்க்கை சூறித்த நாள் மற்றும் நேரம் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அழைப்புக் கடிதம் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பில் பெற்ற மொத்த மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ப்பட்ட பயிற்சி மையத்தில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப பயிற்சிக்கு அழைக்கப்படுவர் என்றும் இப்பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்புகள் தினமும் வந்து செல்லும் வகையில் மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை நடைபெறும் எனவும் பயணப்படிகள் வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்பிற்கான சேர்கைக்கு இட ஒதுக்கீட்டு விவரங்கள் பொது – 31சதவீதம் பிற்படுத்தப்பட்டோர் – 26.5சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் 3.5சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (DNC) 20சதவீதம், ஆதி திராவிடர்-15சதவீதம், சீர்மரபினர் – 3 சதவீதம், பழங்குடியினர்-1சதவீதம், மொத்தம் – 100சதவீதம்.
மேலும் விவரங்களுக்கு https://tnau.ac.in/cecc/ என்ற மின்னஞ்சல் முகவரியிலும் 0422 – 6611242 / 6611442 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.