41வது முறையாக கொரோனா நிதி வழங்கிய யாசகர்

தூத்துக்குடி அருகே உள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பூல் பாண்டியன் ஒரு யாசகர் ஆவார். அவர் தாம் யாசகமாகப் பெறும் பணத்தைச் சேமித்து தனக்கென்று செலவழிக்காமல் அத்தொகையை பொது நிவாரணங்களுக்கு உதவியாக வழங்கி வருகிறார். தனது சேமிப்பில் இருந்து கொரோனா தொற்று காலத்தில், தனது சேமிப்பிலிருந்து ரூ.10,000-ஐ பலமுறை மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நிவாரணமாகவும் வழங்கி வந்திருக்கிறார்.

சேவையின் காரணமாகப் பொதுமக்களால் பாராட்டுக்களைப் பெறும் பூல் பாண்டியன், 41-வது முறையாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ரூ. 10,000 தொகையை கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இத்துடன், இவர் மொத்தம் ரூ.4 லட்சத்து 10,000 தொகையை நிவாரண நிதியாக வழங்கியிருக்கிறார்.

பூல் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியபோது,

‘‘யாசகம் மட்டுமே கேட்க எனக்கு தெரியும், யாருக்கும் யாசகம் கொடுக்கத் தெரியாது என்பதாலும் ஏழைகளுக்கு உதவி சென்றடையும் என்பதாலும் நான் அரசிடம் .கொரோனா நிதி வழங்கி வருகிறேன்.  மற்றவர்கள் என்னைப் போல யாசகம் பெறும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.  அனைவரும் உழைத்து மட்டுமே உண்ண வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.  பணத்தின் மீது ஆசை இல்லாத காரணத்தால் நான் யாசகம் பெறும் பணத்தை உதவிக்காக வழங்குகிறேன்’’

என்று தெரிவித்துள்ளார்.

scroll to top