ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய பெண் குழந்தைகள் தின நிகழ்வு

image-1.jpg

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியின் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை மற்றும் பாலின சாம்பியன்ஸ் சங்கம் இணைந்து தேசிய பெண் குழந்தைகள் தினத்தைக் கடைப்பிடிக்கும் பேரணியைத் தொடர்ந்து கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.

கோவை எம்ஜிஜி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் தொழில்முனைவோர் மற்றும் உரிமையாளரும், சிறந்த சமூக சேவகி விருது பெற்றவருமான டாக்டர்.ஜி.பி.கோதனவல்லி, கோவை பேரூர் ஆர்2 காவல் நிலைய எஸ்ஐ செல்வகுமாரியுடன் பேரணியை துவக்கி வைத்தார். அனைத்து முதல் ஆண்டு மாணவர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்கள் பேரூரிலிருந்து பேரூர் செட்டிபாளையம் வரை நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டனர். பங்கேற்பாளர்கள் பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான உறுதிமொழியை எடுத்தனர்.

பேரணியை தொடர்ந்து பெண் குழந்தைகளை காப்பாற்றுதல்: பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான துஷ்பிரயோகத்திற்கு எதிரான கருத்தரங்கம் நடந்தது. மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் சி.ஆர்..ஹேமா வரவேற்று, தலைமை விருந்தினரை அறிமுகப்படுத்தினார். பேராசிரியர் மற்றும் கணிதத்துறை தலைவர் டாக்டர் எஸ்.நாகராணி கலந்துகொண்டார். பிரதம விருந்தினர் டாக்டர்.ஜி.பி.கோதனவல்லி, குழந்தைகளிடம் மரியாதை, பாலின சமத்துவம் மற்றும் பெண்களிடம் நேர்மறை மனப்பான்மை பற்றிப் பேசினார். கணிதவியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர்.எஸ். ஆனி சூசன் ஜார்ஜனா நன்றியுரை நிகழ்த்தினார்.

scroll to top