வீடு புகுந்து நகை பணம் திருட்டு

திரு நகர் திருவள்ளுவர் நகர் தனக்கன் குலத்தை சேர்ந்தவர் நாகம்மாள் 40. இவர் வீட்டை பூட்டிவிட்டு சாவியை மீட்டர் பெட்டியில் வைத்து விட்டு மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அந்த சாவியை எடுத்து மர்மநபர் வீட்டுக்குள் புகுந்து வீட்டில் வைத்திருந்த 10 கிராம் தங்க நகைகள் மற்றும் செல்போன் ஒன்றையும் திருடிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து நாகம்மாள் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.

scroll to top