வீடுபுகுந்து செல்போன், ஏடிஎம் கார்டுகள் திருட்டு

திருப்பரங்குன்றத்தில், வீடுபுகுந்து ரூபாய் 96 ஆயிரம் மற்றும் செல்போன், ஏடிஎம் கார்டுகளை திருடிச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சந்திர கணேஷ் மனைவி கணபதி ஆனந்தம் 38. சம்பவத்தன்று, இவரது வீடு புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூபாய் 96 ஆயிரத்து 100 செல்போன் ஒன்று,நான்கு,ஏடிஎம் கார்டுகள், ரேஷன் கார்டு முதலியவைகளை திருடிச் சென்று விட்டனர் . இந்த சம்பவம் குறித்து ,கணபதி ஆனந்தம் திருப்பரங்குன்றம் போலீஸி ல் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

scroll to top