விஷ பூச்சி கடித்து முதியவர் பலி

விளாச்சேரி அண்ணா மெயின் வீதியை சேர்ந்தவர் அபுபக்கர் 75.இவர் வீட்டில் நடந்து சென்றபோது விஷ பூச்சி கடித்து மயங்கி விழுந்தார்.வாயில் நுரை தள்ளிய நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து மகன் முஜிபுர் ரஹ்மான் கொடுத்த புகாரில் திரு நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

scroll to top