விரகனூர் ஊராட்சியில், அரசு சார்பில் புகைப்படக் கண்காட்சி

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஒன்றியம்,விரகனூர் ஊராட்சி மன்றத்தில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் கொரேனா வைரஸ் விழிப்புணர்வு சிறு புகைப்பட கண்காட்சி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்றது.
இக்கண்காட்சியை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலிதளபதி தொடங்கி வைத்தார். உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வா. விநோத் முன்னிலை வகித்தார். செய்தி மக்கள் தொடர்புத்துறையைச் சேர்ந்த ராஜ்குமார், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியை, ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

scroll to top