வாயில் காயத்துடன் சுற்றி திரிந்த யானையை பிடித்து வனத்துறையினர் சிகிச்சை

e4-scaled.jpg

​மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆதிமாதையனூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் வாயில் காயத்துடன் சுற்றி திரிந்த யானையை வனத்துறையினர் பிடித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அதற்கு உதவியாக டாப்சிலிப் பகுதியில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் முத்துகல்லூர் பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் வைத்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். கால்நடை மருத்துவர்கள் சுகுமார். சதாசிவம் ஆகியோர் காயம்பட்ட யானையை பரிசோதித்த போது, யானைக்கு நாக்கு பகுதியில் பெரிய காயம் உள்ளது தெரியவந்தது.

யானை பிடிபட்ட இடத்திலேயே தற்காலிகமாக நிழலுக்காக சாமியானா அமைத்து அதில் வைத்து யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானையின் நாக்கு பகுதியில் காயம் பெரிய அளவில் உள்ளதால் அதற்கு பத்து நாட்களாகவது சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் யானையை மேல் சிகிச்சைக்காக டாப்சிலிப் யானை முகாமிற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

scroll to top