வாக்குச்சாவடி மையங்களில் காமிரா பொருத்தகோரிய மனுதாருக்கு அபராதம் விதித்த உயர்நீதி மன்றம்

தமிழகத்தில் மொத்தம் 12,838 வார்டுகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி தேர்தலிலையொட்டி, முறைகேடுகளை தடுக்கும் வகையில், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை மையங்களில் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சதீஷ்குமார் என்பவர் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது நிலையில், மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ஏற்கனவே புறப்பித்த உத்தரவுகளை ஆய்வு செய்யாமல், மனுதாரர் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக கூறி, மனுதாரர் சதிஷ்குமாருக்கு  ரூ.5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தது.

scroll to top