மதுரை மேலமடை, தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், வளர்பிறை பஞ்சமியையொட்டி, இக்கோயிலில் அமைந்துள்ள வராஹியம்மனுக்கு, பக்தர்களால், சிறப்பு ஹோமங்களும், அபிஷேக, அர்ச்சணைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு, வராஹியம்மனுக்கு பாயசம் பிரசாதம் படைத்து வழிபட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை, ஆலய மகளீர் குழுவினர், கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.