வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தலைமை செயலாளர் ஆய்வு

மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் திரு.சிவ்தாஸ்மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமுக்கம் மைதானத்தில் ரூ.47.72 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கலாச்சார மைய கட்டுமான பணிகள், மதுரை மாநகரில் குருவிக்காரன் சாலை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.23.17 கோடி மதிப்பீட்டில் ஆற்றின் குறுக்கே செல்லும் தரைப்பாலத்தினை உயர்மட்டப் பாலமாக மாற்றியமைக்க நடைபெற்று வரும் இறுதி கட்ட பணியினையும், அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.1295.76 கோடி மதிப்பீட்டில் முல்லை பெரியார் அணையில் இருந்து மதுரை மாநகராட்சியில் 100 வார்டு பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்குவதற்கு குழாய்கள் மற்றும் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்கீழ், அண்ணாநகர் எஸ்.எம்.பி.காலனியில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, அறிஞர் அண்ணா மாளிகை ஸ்மார்ட் சிட்டி கருத்தரங்கு கூடத்தில், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் குறித்தும், மாநகராட்சியின் 100 வார்டு பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்குதல், சாலைகள் அமைத்தல், புதிய தெருவிளக்குகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல், மாநகராட்;சி பகுதிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளுதல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் திடக்கழிவுகளை முறையாக அகற்றுதல், மாநகராட்சி பள்ளிகளின் கற்பித்தல், சிறப்பு பயிற்சிகள், வரி வசூல் பணிகள், வரைபட மற்றும் கட்டிட அனுமதி, 247 மக்கள் குறைதீர்க்கும் பிரிவு பணிகள், சேதமடைந்த மற்றும் அபாயகரமான தனியார் மற்றும் அரசுக் கட்டிடங்களை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இடித்து அப்புறப்படுத்தவும் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ் சேகர். ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், துணை ஆணையாளர் சங்கீதா, நகரப்பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் மரு.ராஜா, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி ஆணையாளர்கள்,
தட்சிணாமூர்த்தி, அமிர்தலிங்கம், சுரேஷ்குமார், உதவி ஆணையாளர் (வருவாய்)
ஆ.ரெங்கராஜன், உதவி ஆணையாளர் (கணக்கு) விசாலாட்சி, உதவி செயற்பொறியாளர் (திட்டம்)
சுப்புதாய், கல்வி அலுவலர் ஆதிராமசுப்பு, உதவி செயற் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

scroll to top