மதுரை அண்ணாநகர் யாணைக் குழாய் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் சங்கடஹரசதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு நடைபெற்றது சிறப்பு அபிஷேகம்.
மேலும், பக்தர்களுக்கு அர்ச்சனைகள் செய்யப்பட்டு, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், சந்தான, சௌபாக்யா விநாயகருக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.