மதுரையில் முழு ஊரடங்கு: பலத்த போலீஸ் பாதுகாப்பு

கொரோனா-ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு சார்பில் 3வது ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு மதுரை மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . 27 நிரந்தர சோதனைச் சாவடிகளில், மக்கள் யாரும் நடமாடுகிறார்களா வாகனங்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுகின்றனவா என்பது குறித்து சோதனை நடைபெறுகிறது. 80 தற்காலிக சோதனை தடுப்பு வேலிகள் அமைத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து, மதுரையின் முக்கிய பகுதிகளான கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம், பழங்காநத்தம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், ஆங்காங்கே சோதனை சாவடிகள் வைத்து வாகனங்களில் வருபவர்களை சோதனை செய்து பின்னர் அனுப்பி வைக்கின்றனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில், ஆக்ஸிசன் படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, அரசு அறிவித்துள்ள மூன்றாவது வார ஞாயிற்றுக்கிழமையிலும் முழு ஊரடங்கு மதுரையிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

scroll to top