பெண்களுக்கு சொத்தில் சம பங்கு வாங்கி கொடுத்தது திமுக: முன்னாள் அமைச்சர்

மதுரை மாநகராட்சியில், 36-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொன் வளவன் என்ற ராஜாவை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் பேசியது:
மதுரை யாணைக்குழாய் முத்துமாரியம்மன் கோயில் அருகே, திமுக வேட்பாளர் ராஜாவை ஆதரித்து அவர் மேலும் பேசியது: திமுக வெற்றி பெற்றால், மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்கள் நிறைவேற்றப்படும். பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு, அரசு வங்கிகள் மூலம் அதிக கடன் உதவிகளை, திமுக அரசு செய்தது என்றார். இந்த பிரசாரத்தில், திமுகவைச் சேர்ந்த ஜி. முருகன், இ. சிவா, பி. மூர்த்தி, ஆர். சந்திரன், முனீஸ்வரன், கருப்பச்சாமி, சேது, மணி உள்ளிட்டோர், உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தனர்.

scroll to top