பட்டா தொடர்பான திருத்தங்களை மேற்கொள்ள நடைபெறவுள்ள கணினி திருத்த
சிறப்பு முகாமினை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என,
மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி.இ.ஆ.ப., தெரிவித்துள்ளார். அரசின் சேவைகள் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் அரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம், ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது. அதன் தொடர்ச்சியாக, 06.04.2022 அன்று தேவகோட்டை வட்டத்தில், கிளாமலை குரூப் தேர்போகி கிராமம், மேலச்செம்பொன்மாரி மற்றும் உஞ்சனை கிராமங்களிலும், திருப்பத்தூர் வட்டத்தில் சுண்ணாம்பிருப்பு மற்றும் இளங்குடி கிராமங்களிலும், சிவகங்கை வட்டத்தில் ஆலங்குளம் மற்றும் கத்தப்பட்டு கிராமங்களிலும், இளையான்குடி வட்டத்தில் முள்ளியாரேந்தல் மற்றும் மேலப்பிடாரிச்சேரி கிராமங்களிலும், காளையார்கோவில் வட்டத்தில் தடியமங்கலம் கிராமத்திலும் நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள் மேற்படி வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன் அடைந்து கொள்ளுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர்
ப.மதுசூதன் ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.
பட்டா திருத்தங்கள் தொடர்பான சிறப்பு முகாம்
