நிதி நிறுவனத்தில் புகுந்து மர்ம ஆசாமி திருட்டு

மதுரை உத்தங்குடியில், நிதி நிறுவனத்தில் புகுந்து திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர். உத்தங்குடி ஜே.சி.பி.காலனியை சேர்ந்தவர் ராமலிங்கம் 62.இவர், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று, அவரது நிறுவனத்தில் புகுந்த மர்ம நபர் அங்கு இருந்த பணம் ரூபாய் முப்பதாயிரத்தை திருடிச்சென்றுவிட்டனர். இந்த திருட்டு குறித்து, உரிமையாளர் ராமலிங்கம் கொடுத்த புகாரில், கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு ஆசாமியை தேடிவருகின்றனர்‌.

scroll to top