தமிழகத்தின் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் நபார்டு வங்கி மதுரை மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ 13966.72 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது.
2022-23 ஆம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை திரு ளு அனீஷ் சேகர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். சக்தி பாலன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அனில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், தமிழ் செல்வன் வளர்ச்சி அதிகாரி, வங்கிகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலகர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், இந்த திட்ட அறிக்கையை வெளியிட்டு கூறுகையில்: விவசாயத்தில் நீண்ட கால கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை இத்திட்டம் விளக்குவதாக குறிப்பிட்டார்.
இது போன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு லாபகரமான வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும் என்று தெரிவித்தார். வேளாண்மையில் இயந்திரமயமாக்கல் சொட்டு மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும் என்றும் ஆட்சியர் கூறினார்.
வங்கிகள் மேலும், இதுபோன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்.
. சக்தி பாலன் , மதுரை மாவட்ட வளர்ச்சி மேலாளர் இக்கடன் திட்ட அறிக்கை பல அரசு துறைகள் வங்கிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவர அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கும் மத்திய அரசின் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு இந்த வளம் சார்ந்த கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கையானது, மாவட்டத்தின் கடன் திட்டமிடுதலில் ஒரு அங்கமாக இருந்து வங்கிகளுக்கு கிளை அளவிலான கடன் குறியீட்டை நிர்ணயம் செய்வதற்கு உதவிகரமாக இருக்கும் என்றார். இந்த அறிக்கை ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில் உள்ள ஒதுக்கீடுகளை அடிப்படையாக வைத்து தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையின் உதவியுடன் விருதுநகர் மாவட்டத்திற்கான வருடாந்திர கடன் திட்டம் தயாரிக்கப்படும். அனில, முன்னோடி வங்கி மேலாளர், வங்கிகள் மதிப்பிடப்பட்ட கடன் திறன்களை உணர பின்பற்ற வேண்டிய யுக்திகள் இந்த திட்ட ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன என கூறினார். வங்கிகள் தங்கள் இலக்குகளை அடைய திட்ட ஆவணத்தை பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.