மதுரை மேற்கு உட்கோட்டம் அலங்காநல்லூரில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் பாதுகாக்கப்பட்டு வளர்த்து வந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம், மேற்கு உட்கோட்டம் நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட அலங்காநல்லூர் மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் பூதகுடி பிரிவு அருகே பல ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.
மேலும் ,கடந்த 20 ஆண்டுக்கு மேலாக இந்த மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன. நெடுஞ்சாலைத்துறை ஒப்புதலுடன் வழங்கப்பட்டது. இதை, தற்போது மரங்களை வெட்டி யும்
இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட பனைமரங்கள் வெட்டும் தருவாயில் உள்ளன. இதனால்,
பனை மரங்களை வளர்க்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தற்போது, அங்குள்ள பனைமரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதனால், அப்பகுதி மக்கள் மரம் வளர்ப்பதற்கு எவ்வளவு செலவு செய்கிறோம். இந்த பகுதி பசுமை நிறைந்து காணப்படுகிறது. இதனை தனி நபர்கள் தங்களது சுயநலத்திற்காக மரங்களை வெட்டுவதை நெடுஞ்சாலை துறையினர் இதை கண்டு கொண்டார்களா, கண்டு கொள்ளவில்லையா என தெரியவில்லை என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணம் என்ன என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே, இனியாவது அப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டாமல், பாதுகாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.