தொழிலதிபர் ராகுல் பஜாஜ் காலமானார்

இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் பஜாஜ்  குழுமமும் ஒன்று. இந்நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் ராகுல் பஜாஜ். இவருக்கு கடந்த 2001ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்துள்ளது. வயது முதிர்வால் ஏற்படும் உடல் உபாதைகள் காரணமாக, கடந்த வருடம்,  பஜாஜ் குழுமத் தலைவர் பதவியிலிருந்து ராகுல் பஜாஜ் விலகி வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில், இவருக்கு கடந்த  வாரம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் புனேவிலுள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராகுல் பஜாஜ் காலமானார்.  அவரது மறைவிற்கு  குடியரசுத்தலைவர், பிரதமர் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முன்னணி தொழில் அதிபர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மூத்த தொழிலதிபர் ராகுல் பஜாஜ் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தெரிவித்துள்ளார்

scroll to top