தான் எந்த மதத்தை சார்ந்தவன் என்பதை காட்டாமல் இஸ்லாமியர்களை ரவுடிகளாக மாற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை திருநங்கை என்று அழைக்கலாமா என்று பா.ஜ.க சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கேள்வியெழுப்பியுள்ளார்.பெற்றோரை இழந்த இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் கல்வி செலவு மற்றும் அடிப்படை தேவைகள் என அனைத்து செலவுகளையும் கோவை மாவட்ட பா.ஜ.க.அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் கணபதி ஜான்சன் ஏற்றுக்கொண்டுள்ளார்.இந்நிலையில் இந்த குழந்தைகளின் முதல் கட்ட தேவைகளுக்கான நிதி உதவி வழங்கும் விழா கோவை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் பா.ஜ.க சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் முரளி,சிறுபான்மை அமைப்பின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜோசன், வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் கலைச்செல்வன்,அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் கணபதி ஜான்சன்,மாவட்ட செயலாளர் பூவை தங்கம்,மண்டல் தலைவர் சௌந்தர்ராஜன்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கணேஷ் பாபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம்,பேசுகையில்,
பா.ஜ.க கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரான கட்சி என்று திமுக,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆனால், பா.ஜ.க இஸ்லாமிய, கிறிஸ்தவ ஏழை மாணவர்கள் கல்லூரி மற்றும் பள்ளிகளில் சேர்வதற்கான தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். என்றூம் கடந்த மாதம் கோவையில் 50 இஸ்லாமியர்கள் பா.ஜ.க.,வில் இணைந்தனர்.இன்றும் பலர் இணைய உள்ளனர் என்றார். மேலும்,மதுபான கடைகள், மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட நெருக்கடி மிகுந்த இடங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், திமுக இந்து விரோத அரசு கோவில்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் என குற்றஞ்சாட்டினார்.மாநில தலைவர் அண்ணாமலை அரசுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார் என்றும் . அதற்குள் கட்டுப்பாடுகளை விளக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.எங்கு சென்றாலும் வி.சி.க தொண்டர்கள் எனக்கு எதிராக போராடி வன்முறையை தூண்டுகின்றனர்.என்றார். மேலும்,வி.சி.க தலைவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை அக்கட்சியில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.தான் எந்த மதத்தை சார்ந்தவன் என்பதை காட்டாமல் இஸ்லாமியர்களை ரவுகளாக மாற்றும் வி.சி.க தலைவர் திருமாவளவனை திருநங்கை என்று அழைக்கலாமா என கேள்வி எழுப்பியுள்ளார். திருமாவளவனை திருநங்கை என்பதா, ஆண் என்பதா? பெண் என்பதா? என்று தெரியவில்லை.இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் காக்க வந்தவர் போல் வந்து, ரவுடிகளாக மாற்ற முயற்சி செய்கிறார்.வெளி மாநிலங்களில் இருந்து பருப்பு உட்பட பல பொருட்கள் தமிழகத்திற்கு வருகின்றன. பிறகு எப்படி ‘மேட் இன் தமிழ்நாடு’ செல்லுபடியாகும்? இது பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் உள்ளது. தி.மு.க ஆட்சி காவல் துறையை கையில் வைத்துக் கொண்டு உள்ளாட்சி இடைத் தேர்தலை நடத்தி முடித்துள்ளார். அதன் முடிவுகளே தற்போது வெளியாகி உள்ளதாக அவர் தெரிவித்தார்.