திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் இரும்பு பிரோ பூட்டு உடைப்பு

WhatsApp-Image-2023-05-06-at-7.37.13-PM.jpeg

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் மலை மேல் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.

தென் திருக்கைலாயம் என, அழைக்கப்படும் காசி விசுவநாதர் கோவிலில் , மர்ம நபர்கள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு, இரும்பு பீரோவை உடைத்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மேலும், அங்கிருந்து சிசிடிவி கேமராவின் மீது விபூதியை ஊதிவிட்டு சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்க் எனப்படும் முக்கிய பதிவுகளையும் எடுத்துச் சென்றுள்ளனர் .

இது குறித்து, திருக்கோவில் நிர்வாகம் சார்பில், திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

scroll to top