தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை

தமிழக அரசு ஆணை பிறப்பித்தது

தமிழ் வழியில் படித்த வர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னு ரிமை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலானதமி ழக அரசு ஏற்கெனவே அறிவித்த நிலையில், தற்போது அதற்கான அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.
திமுக அரசு பதவியேற்றதும் தொடங்கிய முதல் சட்டப் பேரவைக் கூட்டத்தொடரின் ஆளுநர் உரையின்போது, “தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கும், அரசுப் பள்ளியில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னு ரிமை கொடுக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்” என்று கூறப்பட்டருந்தது.
பின்னர், கரோனா தொற்று காரணமாக பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ்மொழியில் பயி ன்றவர்களுக்கு அரசுப் பணி யிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ் வழியில் அரசுப் பள்ளியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான கூட்டத் தொடரில் உரையாற்றிய மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன், “வேலை வாய்ப்பு மையங்கள் மற்றும் நாளிதழ் விளம்பரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி பணி நியமனங்களில் இந்த இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
கரோனா தொற்று காரணமாக பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர் களுக்கு சுழற்சி முறை யில் இடஒதுக்கீடு வழங்கும்முறை தற் போது நடைமுறைக்கு வந்துள்ளது.
மேலும், போரில் உடல் தகுதியை இழந்த ராணுவ த்தினர், கணவரை இழந்த வர்கள், சாதி மறுப்பு திருமண தம்பதியர் ஆகியோருக்கும் சுழற்சி முறையில் இடஒதுக்கீடு வழங்கும் முறை அமலா கிறது.
கல்லூரிகளில் முழுவது மாக தமிழ் வழியில் கல்வி பயின்றிருந்தால் மட்டுமே அரசுப் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். தமிழ் வழியில் படித்ததற்கான கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மையை ஆய்வு செய்த பிறகே இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

scroll to top