தமிழ் வளர்ச்சி துறை சார்பாக காரியாபட்டி வட்டார மண்ணின் பெருமை சிறந்த நூலாக தேர்வு: அமைச்சர் விருது

IMG-20220510-WA0003-min.jpg

காரியாபட்டி வட்டார மண்ணின் பெருமை” என்ற நூலுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி யை சேர்ந்தவர் பரதன் .
இவர் ,புள்ளியல் துறையில் அலுவலராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தனது, ஓய்வுக்குபிறகு தன்னுடைய இல்லத்தை மனுநூல் நிலையம் என்ற பெயரில் நூலகம், நடத்தி வருகிறார். அரசு தேர்வு பணி, பயிற்சிகள், யோகா பயிற்சி, சிலம்பாட்டம் , கேரம், தேவார போட்டிகள் மற்றும் மாணவர்களின் கல்விக்காக பல உதவிகள் செய்வது போன்ற பணிகளை செய்து வருகிறார். காரியாபட்டி வட்டார மண்ணின் பெருமை ” என்ற நூலை தயாரித்துள்ளார். காரியாபட்டி வட்டார கிராமங்கள் உருவாகியது.
கிராம பெயர்கள் வருவதற்கு காரணம், சுதந்திர போராட்டத்திற்கு போராடிய தியாகிகளின் வரலாறுகள், சர்வமத வழிபாட்டு தலங்கள், மண்ணின் வகை, விவசாய மேம்பாடு பற்றி விபரங்களை கிராம கிராமாக சுற்றுபயணம் சென்று தகவல் சேகரித்து புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

scroll to top