டீசல் ஊற்றி பெண் தற்கொலை முயற்சி – ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

00001.jpg

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் தன செல்வன் இவர் சென்னை மத்திய தூல் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் இவரது மகனுக்கு சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மேனேஜ்மென்ட் கோட்டா எம்பிபிஎஸ், சீட் வாங்கி தருவதாக கூறி கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பிர்தோஸ் சலாவுதீன் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு 23 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுள்ளார்.

ஆனால் மருத்துவ படிப்பு சீட்டு வாங்கித் தராமல் வெகு நாட்களாக இழுத்தடிப்பு செய்து ஏமாற்றியிருக்கிறார், இது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையம், ஐஜி அலுவலகம்,ஆணையாளர் அலுவலகம்,முதலமைச்சர் செல் பிரிவு,மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிங்காநல்லூர் காவல் நிலையம் என அனைத்திலும் தொடர்ந்து மூன்று வருடங்களாக புகார் கொடுத்துள்ளார். புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மனவேதனை அடைந்த தனசெல்வனது மனைவி விமலா இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் .உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

scroll to top