ஜல்லிக்கட்டுக்கு திமுக உரிமை கோர முடியாது – எச்.ராஜா

vlcsnap-2023-05-19-18h28m33s965.jpg

​கோவை ஈச்சனாரி பகுதியில் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் “தமிழகம் முழுக்க மதுக்கடைகள் திறக்கபட்டு இருக்கின்றது.  கள்ள சாராயத்தால் 22 பேர் இறந்துள்ளனர்.சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு காரணமாக மது இருக்கின்றது. மது விலக்கு கொண்டு வரப்பட வேண்டும்.கள்ள சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதை கண்டித்து நாளை மகளிரணி போராட்டம் நடத்தப்படும். மகளிரணி சார்பில் ஆளுநரை பார்த்து மனு அளிக்கவும் இருக்கின்றனர். நாளைய ஆர்ப்பாட்டம் மகளிரணி சார்பில் நடந்தாலும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்.

மதுவிலக்கு மாநில அளவில் முடிவு செய்யபட வேண்டியது. கள்ளச்சாராய மரணம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.கள்ளசாரயம் கூடாது என்பதற்காக மதுக்கடைகள் கொண்டு வரப்பட்டது. அப்புறம் ஏன் கள்ள சாராயம் வருகிறது. சாராயத்திற்கு வழிவகை செய்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

பக்கத்து வீட்டில் குழந்தை பிறந்தால் நான்தான் காரணம் என சிலர் சொல்லி கொள்கின்றனர், அது போல ஜல்லிகட்டிற்கு நாங்கள்தான் காரணம் என சொல்லி கொள்கின்றனர். ஜல்லிகட்டுக்கு யார் யாரோ கிரிட்டிட் எடுத்து கொள்கின்றனர். ஆனால் உண்மையில்  காங்கிரஸ் திமுக  கூட்டணி ஆட்சியின் போது ஜல்லிகட்டிற்கு தடை விதிக்கப்பட்டது.  2016 அரசாணைக்கு வாங்கிய தடை இப்போது நீங்கி இருக்கின்றது. ஜல்லகட்டு மீண்டும் நடைபெற காரணமான  நரேந்திரமோடிக்கு நன்றி பாராட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. ஜல்லிகட்டின் போது மாநில அரசை வழிநடத்தியது மத்திய அரசுதான். 100 சதவீத கிரிடிட் மத்திய அரசுக்குதான்.அப்போது  முதல்வராக இருந்தவர் ஒ.பி.எஸ், இதற்கு அதிமுக எடப்பாடி பழனிச்சாமி உரிமை கொண்டாடினாலும் தவறில்லை. திமுக ஸ்டாலின் உரிமை கொண்டாட முடியாது” என்று பேசினார்

scroll to top