ஜன.15-ல் மதுரையில் இறைச்சி விற்கத் தடை: மாநகராட்சி

மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தமிழக அரசின் அரசாணை  (கிராமப்புற வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்துறை).1-ன்படி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 15.01.2022 (சனிக்கிழமை) அன்றும், மற்றும் வடலூர் இராமலிங்க சுவாமிகள் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 18.01.2022 (செவ்வாய்கிழமை) அன்றும் இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட நாட்களில், ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உள்ளிட்டவற்றின் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. மேற்கண்ட கடைகளை திறந்து வைக்கவும் கூடாது, மீறி செயல்படு
பவர்களின் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன், பொது சுகாதாரப் பிரிவு சட்டம் 1939ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மதுரை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

scroll to top