சோழவந்தான் பேரூராட்சியில் அனைத்துக் கட்சி கூட்டம்

சோழவந்தான் பேரூராட்சியில் செயல் அலுவலர் ஜீலான்பானு தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.இதில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்தும்,அனைத்துக் கட்சியின் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குச் சாவடிகள், வாக்காளர்கள் விபரம் குறித்து அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.இதில் அனைத்துக் கட்சியினர், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

scroll to top