சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில் சிவப்பிரதோஷ விழா

மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயம், மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் சிவப்பிரதோஷ விழா நடைபெற்றது.விழாவையொட்டி, சிவபெருமாள், நந்திகேஷ்வரன், மீனாட்சி அம்மனுக்கு  சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.சோழவந்தான் பிரளயநாத சுவாமி ஆலயத்தில், சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோயில் பிரகாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதேபோல், திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூலநாதர், மதுரை ஆவின் பாலவிநாயகர் ஆலயங்களில் சிவப்பிரதோஷ பூஜைகள் நடைபெற்றது.

scroll to top