பாலிவுட் திரைப்பட இயக்குனர் சுனில் தர்ஷன் தொடர்ந்த வழக்கில் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை மற்றும் யூ டியூப் நிர்வாக இயக்குனர் கவுதம் ஆனந்த் ஆகியோர் மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
2017 ம் ஆண்டு சுனில் தர்ஷன் இயக்கித் தயாரித்து வெளியான பாலிவுட் படமான ‘ஏக் ஹசினா தி ஏக் தீவானா தா’ எனும் படத்தை காப்புரிமை விதிகளை மீறி யூ-டியூபில் வெளியிட்டது தொடர்பாக இவ்வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த மும்பை பெருநகர நீதிமன்றத்தின் நீதிபதியிடம் தனது திரைப்படத்திற்கான காப்புரிமையை வேறு யாருக்கும் வழங்கவில்லை எனவும், தனது அனுமதி இன்றி யூ டியூபில் வெளியிடப்பட்டதாகவும் சுனில் த்ர்ஷன் முறையிட்டார்.வழக்கை விசாரித்த நீதிபதி, சுந்தர் பிச்சைமற்றும் கவுதம் ஆனந்த் தவிர கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் மூன்று அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, இவர்கள் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து எப்.ஐ.ஆர். தாக்கல் செய்துள்ளனர்.