சாலையில் அருவி போல் ஓடும் மழைநீர்: அவதிப்படும் பொதுமக்கள்

கோவை மாவட்டம் பேரூர் குளத்தில் நீச்சல் தெரியாமல், தண்ணீரில் விழுந்த நபரை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பது குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கோவை மாவட்டம், கோவைப்புதூர் தீயணைப்பு நிலைய அலுவலர், ரவிச்சந்திரன் மற்றும் கோவைப்புதூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் பணியாளர்களுடன் இன்று காலை, பேரூர் பெரியகுளத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மீட்பு பணி ஒத்திகை நிகழ்ச்சி, மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில்  குளத்தில் தவறி விழுந்து உயிருக்கு போராடும், நபரை உயிருடன் மீட்பது எப்படி என்றும், தற்போது வடகிழக்கு பருவமழை பல்வேறு பகுதிகளில் அதிகமாக பெய்து வருகிறது, மழை வெள்ளம்  சூழ்ந்த பகுதிகளில் பாதுகாப்புடன் இருப்பது எப்படி என்று  , நிலைய பணியாளர்கள் பொதுமக்களுக்கான விழிப்புணர்வை தகுந்த உபகரணங்களுடன்  விளக்கி, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர், மேலும் தண்ணீரில் யாரும் தவறி விழுந்து விட்டால், உடனடியாக அவர்களுக்கு என்னேன்ன முதலுதவி செய்ய வேண்டும் என்றும்,என்னேன்ன உதவிகளை செய்தால் அவர்களை காப்பாற்ற முடியும் எனவும் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கபட்டது.

scroll to top