மதுரை மாவட்ட தனிப்படையினர் உசிலம்பட்டி தாலுகா, காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீரிப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ரோந்து மேற்கொள்ளும் போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த ராணி(45) கைதுசெய்து செய்தனர். மேலும் ,இது சம்பந்தமாக உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். மேலும், அவர்களிடமிருந்து கஞ்சா 2 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 40,600/ ஆகும். மேலும் ,மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. பாஸ்கரன், எச்சரித்துள்ளார்கள்.