கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

old-man1.jpeg

​கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ். கட்டிட தொழிலாளியான இவருக்கு 1.5 சென்ட் நிலத்துடன் கூடிய வீடு உள்ளது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வேறொரு நபர் அவரது வீட்டையும் நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளதாக கூறி பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மனம் உடைந்த முத்துராஜ் திங்கட்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிப்பதற்கு வந்தார்.

அவர் திடீரென கைப்பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது உடலின் மேல் ஊற்றி கொண்டு தீயை பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர். பின்னர் இது சம்பந்தமாக விசாரிப்பதற்காக அவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

scroll to top