கோவையில் பாஜக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதை அடுத்து போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இழிவுபடுத்தும் விதமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு கேரளாவில் நடத்திய போராட்டத்தை கண்டித்து கோவை குனியமுத்தூர் பகுதியில் பாஜக மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கொண்டு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் சிலர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கொடியை கிழித்து, எரிக்க முயன்றதால் அதை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பாஜக வினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால்.இதனால் கோவை பாலக்காடு சாலை போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது