THE KOVAI HERALD
L.Rajagopal,
கோவை சர்வதேச விமான நிலையம் கோவை உட்பட சுற்றுப்புற 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. தற்போது ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் சென்னை, டில்லி, மும்பை, ஐதராபாத், பூனே, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் விமான சர்வீஸ் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று பரவலுக்கு முன், தினமும் 35க்கும் அதிகமான விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. நோய் தொற்று பரவலுக்கு பின் விமானங்கள் இயக்கம் வெகுவாக குறைந்தது. பல நாட்களுக்குப் பின் மெல்ல இயல்பு நிலையை மீண்டும் திரும்ப துவங்கியது. சமீபத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்தது. தற்போது மீண்டும் விமான போக்குவரத்து குறைய தொடங்கியுள்ளது. தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 24, 23 ஆக குறைந்துள்ளது.
* ஷார்ஜா, சிங்கப்பூர் விமானங்கள் ஹவுஸ்புல்!கோவை விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவதுகோவை விமான நிலையத்தில் தற்போது ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் ஹவுஸ் புல்லாக செல்கின்றன. ஆனால் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள் அடிக்கடி ரத்து செய்யப்படுகின்றன. சில சர்வீஸ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. போதிய எண்ணிக்கையில் பயணிகள் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகும். இருப்பினும் எதிர்வரும் நாட்களில் மீண்டும் உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமான சர்வீஸ் மீண்டும் துவங்கும் என்றும் புதிதாக சில நகரங்களுக்கு விமான சர்விஸ் துவக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.