கோவை – இலங்கை இடையே ஏப்ரலில் துவங்க இருந்த விமான போக்குவரத்து அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோவை – இலங்கை இடையிலான விமான சேவை இந்த மாதம் துவங்கும் என முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது அந்நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார சூழல் காரணத்தால் விமானப் போக்குவரத்து அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்திலிருந்து 3 வெளிநாடுகளுக்கு ஷார்ஜா, சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு விமான சர்வீஸ் வழங்கப்பட்டு வந்தது.  கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக   சர்வதேச போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்பொழுது கோவை- ஷார்ஜா மற்றும் கோவை – சிங்கப்பூர் இடையே விமான போக்குவரத்து மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.கோவை – இலங்கை இடையே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வந்த விமான சேவை இரண்டு ஆண்டுகளாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விமான சர்வீஸ் இந்த மாதம்(ஏப்ரலில்) மீண்டும் துவங்கும் என முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சனை சூழல் காரணமாக அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  கோவை விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது:இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார பிரச்சினை காரணமாக அந்நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.  இருந்தபோதும் இலங்கையிலிருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சர்வீஸ் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னைக்கு விமான சர்வீஸ் வழங்கப்பட்டு வருகிறது. கோவை – இலங்கை இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட விமான சர்வீஸ் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் துவங்கும் என முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் மீண்டும் விமான சர்வீஸ் துவக்கப்படுமா அல்லது மீண்டும் ஒத்தி வைக்கப்படுமா என்பது அன்றைய சூழலை பொறுத்து அறிவிக்கப்படும்.இவ்வாறு விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன

scroll to top