கோவை டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் ஞாயிற்றுக்கிழமை காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த விசாரணையின் அடிப்படையில், முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோரை கைது செய்து உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸ் காவலில் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், கார் வெடிப்பில் உயிரிழந்த முபீனின் உறவினரான அஃப்சர் கான் என்பரை நேற்று கைது செய்துள்ளது.
கோவையில் கார் வெடிப்பு: மேலும் ஒருவர் கைது
