2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால்தான், அனுமதி என்ற மீனாட்சியம்மன் கோவில் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நிர்வாக காரணங்களுக்காக அறிவிப்பு வாபஸ் பெறுவதாக, மதுரை மண்டல இந்துசமய அறநிலையத்துறை இணைஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே, அனுமதி என, கோயில் சார்பாக, இணை ஆணையாளரும், நிர்வாக அதிகாரியுமான செல்லத்துரை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், அறிவிப்பானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.