கோவை சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு கண்டித்து புதன்கிழமை கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளை சிறை பிடிக்கும் ஆர்ப்பாட்டம் அனைத்து கட்சியினர் சார்பாக நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்சி ராம்நகர்.k. சீனிவாசன், மாவட்ட செயலாளர் அணீஸ்,பகுதி பொறுப்பாளர் தாமஸ், மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராஜ் சேதுபதி, வணிக சங்க பேரவையின் பொறுப்பாளர் மாணிக்கம், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சர்புதீன், எஸ்டிபிஐ கட்சியின் மாநில வர்த்தக அணி செயலாளர் அப்துல் கரீம், ஆதித் தமிழர் பேரவை பொறுப்பாளர் அகிலன் உள்ளிட்ட பல கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.