கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடுக்கி, கொல்லம் வயநாடு, பத்தினம்திட்டா, திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை பொங்கல் விடுமுறை அறிவிக்க அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, தமிழக முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று மேற்கண்ட 6 மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் விடுமுறை அறிவித்துள்ளது கேரள அரசு. முன்னதாக,
கேரளாவில் ஜன.15ஆம் தேதி பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 6 மாவட்டங்களுக்கு ஜன.14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.