குடியரசு தினவிழா கொண்டாட்டம்: போலீசார் அணிவகுப்பு ஒத்திகை

கோவையில் வ.உ.சி மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு நலத்திட்ட உதவி வழங்க உள்ளார். கொரோனா தொற்று அச்சம் உள்ளதால் குறைந்த அளவிலான பார்வையாளர்களை கொண்டு விழா நடைபெற உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு போலீஸ் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 2000 பேர் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வ.உ.சி மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

scroll to top