விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி செவல்பட்டி மயானக்கரையில், போதுமான குடிநீர் வசதி செய்துதரக் கோரி பொதுமக்கள், அமைச்சர் தங்கம் தென்னரசு
கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, திருச்சுழி தொகுதி மேம்பாட்டு நிதியில் குடிநீர் திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய போர்வெல் மற்றும் சின்டெக்ஸ் தொட்டி கட்டப்பட்டது. இதனை, காரியாபட்டி நகர திமுக செயலாளர் செந்தில், பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் ஆகியோர் குடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.