விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் தேசிய குழந்தைகள் தினவிழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வருவாய்துறை மற்றும் பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக தேசிய குழந்தைகள் தினவிழா மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவில், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி பங்கேற்று, நரிக்குறவர்கள் குழந்தைகளுடன் மரக்கன்றுகளை நட்டுவைத்தார். நிகழ்ச்சியில், வட்டாட்சியர் தனக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி, பசுமை பாரதம் அறக்கட்டளை நிறுவனர் பொன்ராம், ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார், வழக்கறிஞர் செந்தில் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.