காந்தியின் நினைவு அஞ்சலி: ”இந்து மத வெறியர்களால் கொல்லப்பட்டார்” வாசகத்தால் காவல்துறையுடன் வாக்குவாதம்

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், மற்றும் பல்வேறு அமைப்பினர் என பலரும் காந்திக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக கோவை சிவானந்தா காலனி பகுதியில் மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் காந்தியின் நினைவு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டனர். இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பேனரில் இந்து மத வெறியர்களால் கொல்லப்பட்ட என்ற வசனம் இடம் பெற்றிருந்தது. இதனை காவல்துறையினர் அகற்றும் படி கூறினர். அதனைத் தொடர்ந்து இந்து என்ற வார்த்தை மட்டும்  மறைக்கப்பட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. எனினும் அந்த உறுதி மொழியில் “ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளால் காந்தியடிகள் கொல்லப்பட்டார்” என்று தெரிவிக்கும் போது காவல்துறையினர் தடுத்தனர். இதனால் காவல்துறையினருக்கும் அமைப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நடத்தப்பட்டது.

scroll to top