கரூர் திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து இறுதி கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் வேட்பாளரை இறுதி செய்வதற்கு வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியிடம் கலந்தாலோசிக்காமல் திமுகவினரே தொகுதி பங்கீடு குறித்து பேசிக் கொண்டதாகவும், இதனால் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி திமுகவினரிடம் முறையிட்டுள்ளார். இந்நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வெளியேறிய ஜோதிமணி பேச்சவார்த்தையின்போது, திமுகவினர் வெளியேற சொன்னதாக ஜோதிமணி குற்றச்சாட்டு வைத்ததோடு, பேச்சுவார்த்தைக்கு வந்த கூட்டணி கட்சியினரை வெளியே போகச் சொன்னது கூட்டணி தர்மமா..? என்று ஜோதிமணி ஆவேசத்துடன் கூறிவிட்டு வெளியேறி உள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி திமுக அலுவலகம் முன்பு ஆவேசமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.