கண் விழியில் தேசியக் கொடியை வரைந்த கோவையை சேர்ந்த நகை தொழிலாளி

umt3.jpeg

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா வருகிற 15 ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவை குனியமுத்தூரை சேர்ந்த நகை தொழிலாளி யு.எம்.டி. ராஜா தனது கண் விழியில் தேசியக் கொடியை வரைந்த சாதனை படைத்து உள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது, ” நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டதியாகிகளை கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்திற்கு புதுமையான முயற்சிகளில் ஈடுபடுவேன். இந்த ஆண்டு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளதால் நமது தேசிய கொடியை கண்ணில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கண் விழிக்குள் தேசியக்கொடி வரையும் முயற்சியில் இறங்கினேன். அதன்படி முட்டையின் உள்பகுதியில் வெள்ளை கருவிற்கும், முட்டை ஓட்டிற்கும் இடையே காணப்படும் மெல்லிய படலத்தை பிரித்து எடுத்து அதில் தேசியக் கொடியை வரைந்து அதனை கண் விழிப்பகுதியில் வைத்துள்ளேன். இவ்வாறு செய்வதால் கண் விழிக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது. 

இந்த அளவு சிறிய தேசியக் கொடியை கண்ணுக்குள் பொருத்துவது மிகவும் கடினம். இதனால் பல மணி நேர முயற்சிக்கு பின் வெற்றிகரமாக இந்த கொடியை நான் என் கண்களுக்குள் பொருத்தி உள்ளேன். மேலும் 300 மில்லி கிராம் தங்கத்தை தீக்குச்சி அளவை விட சிறியதாக தங்கத்தை பயன்படுத்தி ஒரு வீட்டின் அருகே இளைஞர் ஒருவர் தேசிய கொடியை தாங்கி நிற்பது போல வடிவமைத்துள்ளேன்.” என்று அவர் கூறினார்.

scroll to top