நீலகிரி மாவட்டத்தில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற 125-வது மலர் கண்காட்சி அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்கியது.

கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் தொடங்கிவைத்தனர். விழாவில் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியரும், நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர் ஜான் சல்லிவனின் சந்ததியினருமான ஓரியல் சல்லிவன் கலந்து கொண்டார். பிரம்மாண்ட மயில் சிற்பம் மலர் கண்காட்சியில் சிறப்பு அலங்காரமாக 80 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு 40 அடி அகலம், 48 அடி உயரத்தில் தேசிய பறவையான மயில் சிற்பம் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மாநிலத்தின் பல்வேறு சின்னங்களான தமிழ் மரவன், பட்டாம்பூச்சி, மரகதப்புறா, வரையாடு, பனைமரம், செங்காந்தள் மலர், பரதநாட்டிய கலைஞர் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த அலங்காரங்கள் 70,000 மலர்களை கொண்டு அமைக்கப்பட்டு உள்ளன. 30 ஆயிரம் மலர்களை கொண்டு செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டு உள்ளது. சிறுத்தை, டால்பின், பாண்டா கரடி, ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், கடற்பசு அலங்காரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன..