இஸ்ரோவின் புதிய தலைவராக ராக்கெட் விஞ்ஞானி சோமநாத் நியமனம்

இஸ்ரோவின் அடுத்த தலைவராக மூத்த ராக்கெட் விஞ்ஞானி சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோ நிறுவனம் இந்தியாவின் செயற்கைக் கோள்களை அனுப்புவதில் உலக அளவில் புகழ்  பெற்று வருகிறது. அண்மையில் செலுத்தப்பட்ட சந்திரயான், மங்களாயன் போன்றவை குறிப்பிடத்தக்கதாகும்.   இந்நிறுவனத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் பதவி வகித்து வருகிறார்.
அவருடைய பதவி காலம் வரும் 14 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அவருக்கு பதிலாக மூத்த ராக்கெட் விஞ்ஞானி சோமநாத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  அத்துடன், அவர் விண்வெளித்துறை செயலராகவும் பதவி வகிக்க உள்ளார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த பதவி வகிக்க உள்ள இவர், தற்போது விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.
கொல்லத்தில் உள்ள டி கே எம் பொறியியல் கல்லூரியில் பி.டெக் பட்டம் பெற்ற சோம்நாத், விண்வெளித்துறையில் பட்ட மேற்படிப்பு தங்கப்பதக்கத்துடன்  பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.   இவர் ஏற்கனவே லிக்விட் புரோபல்ஷன் சிஸ்டம் சென்டர் உள்ளிட்ட பல ராக்கெட் அமைப்புகளிலும், இஸ்ரோவில் 2003-ம் வருடம் நடந்த ஜி எஸ் எல் வி பணிகளில் பணிபுரிந்துள்ளார்.

scroll to top