தமிழகம், கேரளாவில் பெய்து வரும் தொடர்மழையால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல காய்கறிகள் அதிகபட்ச விலைக்கு விற்பனையாகின்றன. தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த மாதம் கிலோ ரூ.15 முதல் 20 வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் பந்தல் தக்காளி மட்டுமே தப்பிப் பிழைத்தது. தரையில் விளையும் தக்காளி முற்றிலும்அழிந்துவிட்டது. இதனால் மார்க்கெட்டிற்கு இந்த தக்காளி வரத்து 25 சதவீதமாக குறைந்தது. வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு தக்காளி ஏலம் எடுத்ததால் விலை கிடுகிடுவென அதிகரித்தது.
ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக ரூ.115க்கு விற்றது. கழிவு தக்காளி எல்லாம் காசாகும் நிலைக்கு மாறியுள்ளது. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் படிக்கல் என்ற ஊரில் தக்காளியை பாலிதீன் கவரில் ‘பேக்’ செய்து கருவாடு விற்பது போல் விற்கின்றனர்.
இரண்டு தக்காளி கொண்ட பாக்கெட் ரூ.18க்கு விற்கிறது. ஒட்டன்சத்திரத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் காய்கறிவியாபாரிகள் இதனை தெரிவித்தனர்.