இந்துக்களுக்கு ஏன் நீங்கள் வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள்- முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

.jpeg

​கோவை வந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், ” இரு முதல்வர்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். முதலாவதாக அண்ணன் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆனதற்கும்  புதுவையில் அண்ணன் ரங்கசாமியும் இன்று தான் பதவியேற்றார்கள் எனவே அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் என  நேற்று முதல் வந்து கொண்டிருக்கிறது. மரியாதைக்குரிய அண்ணன் ஸ்டாலினுக்கு ஒரு கேள்வி ஜாதி மதம் பிரித்து பார்ப்பவர்களால் திராவிட மனதை புரிந்து கொள்ள முடியாது என்பது உங்களது கருத்து. இந்துக்களுக்கு நீங்கள் வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள் நான் ஒரு தமிழகத்தில் பிறந்த இந்துவாக கேட்கிறேன் எதை வைத்துப் பிரித்து பார்ப்பதால் நீங்கள் தீபாவளி பொங்கலுக்கு வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள் எல்லா மத விழாக்களுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும்.எனவே நீங்கள் எப்படி பிரித்துப் பார்க்கிறீர்கள் என்று பதில் சொன்னால் அது நன்றாக இருக்கும்.

இன்று எல்லா அமைச்சர்களும் பத்திரிகையில் இரண்டாண்டு சாதனை குறித்து விளம்பரங்கள் கொடுத்து இருக்கிறார்கள். விளம்பரங்களில் நிதி இருக்கிறதோ இல்லையோ அனைத்திலும் உதயநிதி இருக்கிறார்.எனவே  வாரிசை உருவாக்கிய சாதனை ஈராண்டு சாதனை. அறிவிப்பு வருகிறதோ இல்லையோ அறிவிப்புகளை திரும்பப்பெறும் ஆட்சியாக தமிழகத்தில் இந்த ஆட்சி இருக்கிறது.

கேரளா ஸ்டோரி திரைப்படத்தை நான் பார்க்கலாம் என இருக்கிறேன். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு எதிரானதாக இது சித்தரிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என நினைப்பவர்கள் படத்திற்கு எதிராக இருக்கிறார்கள் தீவிரவாதத்திற்கு எதிராக இருப்பவர்கள் படத்தை ஆதரிப்பார்கள். எனவே அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. ” என்றார்

scroll to top