இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருக்கிறது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க தினத்தை முன்னிட்டு கோவை அதிமுக அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் தமிழ் மொழிக்காக உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள்  பி.ஆர்.ஜி.அருண்குமார் , அம்மன் கே அர்ஜுனன் ,ஏ.கே.செல்வராஜ் , செ.தாமோதரன்   ஆகியோர் கலந்து கொண்டு, தியாகிகள் நடராசன், தாளமுத்து உட்பட 12 தியாகிகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் இந்நிகழ்ச்சியில்  தோப்பு க.அசோகன்,  நிர்வாகிகள் கே. செல்வதுரை,சிங்கை ஜி.ராமச்சந்திரன்,அம்மன் கோபால்,காட்டூர் செல்வராஜ்,கூடலூர் மகேஸ்வரன் , நிர்வாகிகள் கட்சியின் மூத்த நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள்  என பலர் கலந்து கொண்டனர். பின்னர்  முன்னாள் அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி   செய்தியாளர்களிடம் கூறுகையில்: அதிமுக, தமிழ் மொழிக்காக உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு எப்போதும் அஞ்சலி செலுத்தி உரிய மரியாதை வழங்கி வருவதாக தெரிவித்தார். மேலும் இந்த மொழி போரில் கோவை மாவட்ட முக்கிய பங்காற்றி இருப்பதாகவும் பொள்ளாச்சி உட்பட பல பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பல்வேறு போராட்டங்களை அண்ணா நடத்தியதால் திமுக ஆட்சி அமைந்ததாக தெரிவித்த அவர் அதனை தொடர்ந்து அதிமுக வீர மறவர்களுக்கு இப்போது வரை அஞ்சலி செலுத்தி வருவதாக கூறினார். தற்போது வரையிலும் அதிமுக இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேட்டியளித்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் வீட்டில் அவரை களங்கப் படுத்த வேண்டும் என்பதற்காகவே தற்போது பொறுப்பிலுள்ள அமைச்சரின் தூண்டுதலின் பெயரில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ளதாகவும், நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக வெற்றி யை பாதிக்கவும் தேர்தல் பணிகளை முடிக்க வேண்டும் என்பதற்காகவே சோதனை நடத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் முன்னாள் அமைச்சரின் வீடுகளில் இருந்து தற்பொழுது ஒன்றிய செயலாளர் வரை திமுக சோதனை நடத்தி வருவதாகவும் இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

scroll to top